சினிமா

இணையத்தை கலக்கும் பிக்போஸ் புகழ் யாஷிகா

ஜீவா -காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்போஸ் 2-வது தொடரில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

அதே சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து விருந்துக்கு செல்வது, புகைப்படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது நண்பர் ஒருவர் தண்ணீர் போத்தலை பிடித்திருக்க அதை தனது காலால் எட்டி உதைத்த படியே போத்தலை திறந்துவிட்டார்.

இந்த காணொளி இப்பொழுது வைரலாகி வருகிறது.

கருத்து தெரிவிக்க