உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘சம்பள அதிகரிப்பு குறித்து மக்களுக்கு அச்சம் வேண்டாம்’ :திகாம்பரம்

இன்னும் மூன்றே வாரங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என தொழிலாளர் தேசிய சங்க தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் வெலிஓயா தண்டிக்கல்லேவ கீழ்ப்பிரிவு தோட்டத்தின் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் 7 பேச்சஸ் காணி பெற்று தருவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தேன். அவ்வாறே செய்தேன். அதேபோல இன்னும் மூன்றே வாரங்களில் ஒரு நாளைக்கான தொகை 50 ரூபாய் படி மாதாந்தம் 1, 500 ரூபா வினை கட்டாயமாக பெற்றுக் கொடுப்பேன்.

எனவே சம்பள அதிகரிப்பு குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க