உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாத யாத்திரை

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)  பாதயாத்திரை களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘அரசாங்கமே உடனே வெளியேறு’ எனும் தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறையிலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ள பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை வந்தடையவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க