உள்நாட்டு செய்திகள்புதியவை

கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு நாளை

கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு நாளை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள அரச நிலங்கள் தொடர்பான பிரேரணை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கான காரணங்கள் குறித்து இதுவரை தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க