உள்நாட்டு செய்திகள்புதியவை

‘மின்சார வேலி தாக்கி காலியில் ஒருவர் உயிரிழப்பு’

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததாக நம்பப்படும் ஒருவரின் சடலம் காலியின் கரந்தெனிய கெக்கிறீஸ்கந்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கெக்கிறீஸ்கந்தவில் வசிக்கும் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்துக்கு அருகில் பல மின்சார கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அதேவேளை இறந்தவர் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக பொறிகளை பயன்படுத்தியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சம்பவம் குறித்து காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க