உள்நாட்டு செய்திகள்புதியவை

‘முஸ்லீம் மக்களை சீன அரசு துஷ்பிரயோகம் செய்கிறது’

சீனாவின் சில பகுதிகளில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை சீனா துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீன அரசு தனது மக்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.

சகல சீன குடிமக்களும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

சீனாவின் சில பகுதிகளில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சீனாவும் இலங்கையும் பெருமளவில் முதலீடு செய்வதோடு மிக நெருக்கமான இருதரப்பு உறவைக் கொண்டுள்ளன.

எனவே சீனாவில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை வலியுறுத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க