சினிமா

இரகசிய காவல்துறை அதிகாரியாக ஜெய் ஆகாஷ்

ஜெய் ஆகாஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு, `சென்னை டூ பேங்கோக்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ராமகிருஷ்ணா படத்தில் கதாநாயகனாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். இவர் அடுத்து நடித்துள்ள புதிய படத்துக்கு, `சென்னை டூ பேங்கோக்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் ஜெய் ஆகாஷ் ரகசிய காவல்துறை அதிகாரியாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடிகளாக சோனி சரிஸ்டா, யாழினி, சந்தோஷி, செர்ரி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் யோகி பாபு, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், `கும்கி’ அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். சதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் உள்ளன. இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும், சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.’’என இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத சதி திட்டத்தை முறியடிப்பது தான் கதை என சொல்லப்படுகிறது.

கருத்து தெரிவிக்க