விளையாட்டு செய்திகள்

ஓய்வு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த டோனி

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய ஓய்வுகுறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

37 வயதான கிரிக்கட் வீரர் டோனி தற்போது உலக கிண்ண கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 7 ஆட்டங்களில் 223 ஓட்டங்களை சேர்த்துள்ளார். ஆனாலும் அவரது துடுப்பாட்டம் முன்பு போல் இல்லை, மந்தமாகி விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

இந்த நிலையில், உலக கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏபிபி ஊடக நிறுவனரின் கேள்விக்கு பதிலளித்துள்ள டோனி, “நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாளைய (இன்று) போட்டிக்கு முன்பு நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள்,” என கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க