சினிமா

நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையம்சத்தில் வந்தது. இதில் நயன்தாரா கலெக்டராக வந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதில் நயன்தாராவே நடிக்க வேண்டும் என படக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கருத்து தெரிவிக்க