உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

நாகர்கோவிலில் தமிழ் மக்கள் கூட்டணியின் மக்கள் சந்திப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் கருத்துக்களை நேரில் கேட்டறியும் முகமாகவும் நாகர்கோவில் பகுதியில் மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் நாகர்கோவில் கிராமத்தில் குறித்த சந்திப்பு இன்று நடைபெற்றது .

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரும் வடமராட்சி தொகுதி அமைப்பாளருமான இரா.மயூதரன் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் இரா.மயூதரனின் தலைமையுரையைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும் பேராசிரியருமான வி.பி.சிவநாதன், கொள்கைபரப்பு உப செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான க.அருந்தவபாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க