உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நாடு முழுவதிலும் 25 புதிய திரையரங்குகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

இருபத்தைந்து புதிய திரையரங்குகளை நாடு முழுவதிலும் நிர்மாணிக்கும் திட்டம் செயற்பட்டு வருவதாக திரைப்பட தயாரிப்பாளர் டொக்டர் அரோஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரு உணவகம், ஒரு சிறிய பல்பொருள் அங்காடி மற்றும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி ஆகியவற்றைக் கொண்ட இந்த திரையரங்குகளில் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் 10 கோடி ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அவர் சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க