உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாதகமான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தயார் இல்லை!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாதகமான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு சமகால அரசாங்கம் எந்த வகையிலும் தயார் இல்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ முகாம் இலங்கையில் அமைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் கருத்து தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் இவ்வாறான உடன்படிக்கையொன்றை அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கு மாத்திரம் அல்லாது எந்த ஒரு நாட்டுக்கும் இலங்கைக்குள் முகாம் அமைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ருவான் விஜயவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க