உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிசாட்டின் சொத்துப் பொறுப்பு விபரங்களை வெளியிடும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பொறுப்பு விபரங்களை வெளியிடும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

முறையற்ற வகையில் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக ரிசாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சொத்துப்பொறுப்பு விபரங்களை நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியிருந்தது.

இதற்கமைய, 1975ஆம் இலக்க சொத்து பொறுப்புகள் சட்டத்தின் 1ஆம் சரத்தின் படி, சொத்துப்பொறுப்பு விபரங்களை வெளியிடும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்று, நாடாளுமன்றின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க