விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண தொடரின் தீர்மானம் மிக்க போட்டியில் பாகிஸ்தான்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கான தீர்மானம் மிக்க போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று வெள்ளிக்கிழமை விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இன்று இலங்கை நேரம் மாலை 3.00 மணிக்கு லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இந்தப்  போட்டி இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சராசரி ஓட்ட விகிதத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பான வெற்றியை பெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியின் அரையிறுதிக் கனவு கலைக்கப்படும்.

இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு மஷ்ரஃபி மொர்டசாவும் பாகிஸ்தான் அணிக்கு சஃப்ராஸ் அஹமட்டும் தலைமை தாங்குகின்றனர்.

கருத்து தெரிவிக்க