உள்நாட்டு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – ஹிஸ்புல்லாவின் தீர்மானம்

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை தாம் அரசாங்கத்துடன் இணைந்து நடத்தவே விரும்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது, சொத்து குவிப்பு தொடர்பாக அவரிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தாம் முழுமையான வாக்குமூலம் வழங்கியதாகவும் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க