உள்நாட்டு செய்திகள்புதியவை

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் பயிற்சி பெற்ற அன்சாரிடம் விசாரணைகள் தீவிரம்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அமைப்பின் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாவனெல்லை பகுதியில் சேர்ந்த செயின் அன்சார் மொஹமட் என்பவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த போது பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த சந்தேக நபருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க