உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

முஸ்லிம்கள் பலவந்தமாக கைது செய்யப்படுதல் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்தக் கோரிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம்கள் இலங்கையில் அசாதாரண சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு எதிரான சமுக வன்முறைகளும் பதிவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற வன்முறைகள் ஊக்கவிக்கப்படுவதை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க