உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி பதவியேற்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக நேற்று உத்தியோகபூர்வமாக தனது கடமை பொறுப்பை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு பொறுப்பேற்றார்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்த இவர் இடமாற்றத்தின் பின்பு இந்த பிரதி பதவி நிலை பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்த அதிகாரியின் புதிய பதவியேற்பு நிகழ்வில் இராணுவ பொது நிர்வாக பிரதானி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவ செயலாளர் நாயகம், நிதி மேலாண்மை பணிப்பாளர் நாயகம், போர்கருவி பணிப்பாளர் நாயகம், பயிற்சி பணிப்பாளர் நாயகம் போன்ற உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

2007 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சி பணிப்பாளராகவும், 2010 – 2013 வரை சுபசாதனை பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ எகடமியின் கட்டளை தளபதியாகவும், 51, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், சீனாவில் பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இவருக்கு ரணவிக்ரம பதக்கம், ரன சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்கள் இவரது சேவையை கௌரவித்து இராணுவத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க