உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் உள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க