உள்நாட்டு செய்திகள்புதியவை

புதிய எதிர்பார்ப்புக்களுடன் புதிய அரசாங்கம்: மனோ நம்பிக்கை

புதிய எதிர்பார்ப்புக்களுடன் புதிய அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியினால் நற்செய்தியொன்று வழங்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த காலத்தில் காணப்பட்ட அரசர்கள், இளவரசர்கள், ராணிகளுக்கு எதிர்வரும் காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க