விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கான அரையிறுதிப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரையிறுதியின் இரண்டாவது போட்டியில் இரண்டாம் இடத்துக்கு தெரிவாகும் அணியுடன் இங்கிலாந்து அணி பெர்மிங்காம் மைதானத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி மோதவுள்ளது.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ள அவுஸ்ரேலிய அணி இறுதி லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடிக்கும் அணியுடன் அவுஸ்ரேலிய அணி மோதும், அதேநேரம் தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணியுடன் மோதும்.

இதேவேளை, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணியுடன் மோதும்.

அதேநேரம் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்க அணியை தற்கடித்தால் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணியுடன் அவுஸ்ரேலிய அணி மோதும்.

இந்த நிலையில், அவுஸ்ரேலிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் புள்ளிப்பட்டியைல் இரண்டாம் இடத்தை பிடிக்கப்போகும் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் அரையிறுதில் மோதும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க