உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மின்சாரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை பொறியியலாளர்களுடன் மேற்கொள்ளப்படும் எனவும் பாவனையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் துரித தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மின்சாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட பல அமைப்புக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் எந்த வகையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க