உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எழுத்து மூலம் உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு கூட்டமைப்பு ஆதரவு!

தமிழ் மக்களது கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி அதற்கான ஆதரவை தெரிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளரிடம் எழுத்து மூலம் விருப்பம் பெற இம்முறை தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவாக கிடைக்கப் போவதில்லையென்று தெளிவாகியிருப்பதனால், தமிழ் மக்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக பலம்பெற்றிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மக்களின் உரிமைகளை வழங்கும் போது தெற்கில் மக்கள் குழப்பமடைவார்கள் என்ற சூழ்நிலை மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் பேரம்பேசும் ஒரு அணுகுமுறையில் தமிழ் தரப்பு ஈடுபட வேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க