உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

250 புதிய பாடசாலைக் கட்டிடங்கள் இன்று திறந்து வைப்பு

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ், சகல வசதிகளுடனும் கூடிய 250 பாடசாலைகளை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் தலைமையில் பேராதனை தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 200 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டன.

இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மாணவர்களின் பாவனைக்காக புதிய பாடசாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.

குறித்த நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் நான்காயிரத்து 500 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க