உள்நாட்டு செய்திகள்புதியவை

வட மாகாண மக்களை ஏமாற்றிய ஆளுநர் – மக்கள் கவலை

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பில் வட மாகாண ஆளுநர் கலந்து கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, வட மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் திணைக்கள தலைவர்களும் குறித்த மக்கள் சந்திப்புக்காக வருகை தந்திருந்த போதும் வட மாகாண ஆளுநர் வரவில்லை.

இதன்காரணமாக வருகை தந்திருந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க