சினிமா

ஜோதிகாவின் “ஜாக்பாட்” திரைப்படத்திற்கு’யு’ சான்றிதழ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் முடித்து நடிப்பில் இருந்து விலகியிருந்தார். பல வருடங்கங்களுக்குப் பிறகு “36 வயதினிலே” படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து “மகளிர் மட்டும்”, “நாச்சியார்”, “செக்கச் சிவந்த வானம்” மற்றும் “காற்றின் மொழி” ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர், “ராட்சசி” மற்றும் “ஜாக்பாட்” ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். இதில் “ராட்சசி” படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்துள்ள மற்றொரு படமான ‘ஜாக்பாட்’ படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இப்படத்தை குலேபகாவலி படத்தை கல்யாண் இயக்கியுள்ளதாகவும் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கருத்து தெரிவிக்க