உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” – இரண்டாம் நாள் நிகழ்வு இன்று

மொனராகலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்றாகும்.

இந்நிகழ்வில் 40 ஆயிரம் பேர் நன்மை அடைந்துள்ளார்கள்.

மொனராகலை மாவட்டத்தில் அமுலாகும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிறைவில் 449 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய, மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மேலும் பின்தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் கிராமிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க