உள்நாட்டு செய்திகள்புதியவை

முக்கியமான இரண்டு வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழாம்!

முக்கியமான இரண்டு வழக்குகளை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிரதம நீதியரசரால் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு இரு வேறு வழக்குகளை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் மற்றும் சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க