உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்பவர்களுக்கு வெகுமதி

ஜூலை 5 முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட நடவடிக்கையின் போது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, போதையில் வாகனம் செலுத்தும் தனியார் அல்லது பொது போக்குவரத்து சாரதியை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு முறையே ரூ .2500 மற்றும் ரூ .5000 பரிசுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் போதையில் வாகனம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36,000 க்கும் அதிகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய ஜூலை 05 முதல் சிறப்பு காவல்துறை பிரிவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க