உள்நாட்டு செய்திகள்புதியவை

சமாதான பணிகளுக்காக தென் சூடான் செல்லும் இலங்கை இராணுவம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான படைப் பணிகளுக்காக இராணுவத்தின் வைத்திய படைப்பிரிவுடன் சில அதிகாரிகளும் தென் சூடானுக்கு சென்றுள்ளனர்.

குறித்த சமாதான பணிகளுக்காக இலங்கையின் உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய குழு இன்று புதன்கிழமை பயணமானதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

11 அதிகாரிகள் அடங்களான இந்தக் குழுவில் 61 பேர் சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிறிக்கேடியர் சுனில் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

தென் சூடானில் சமாதானப்பணிகளில் இவர்கள் ஒருவருடம் சேவையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க