உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மனநல சிகிச்சை பிரிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி

எதிர்காலத்தில் இரண்டு அரச வைத்தியசாலைகளில் மனநல சிகிச்சை பிரிவுகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன இது தொடர்பான ஒரு திட்டத்தை முன்வைத்தார். இந்நிலையிலேயே அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி , கண்டி போதனா வைத்தியசாலையில் ரூ .503 மில்லியன் செலவில் ஒரு மனநல பிரிவும், சிலாபம் பொது மருத்துவமனையில் ரூ .213.8 மில்லியன் செலவில் மற்றுமொரு பிரிவும் நிறுவப்படவுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 40 சதவீத உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கருத்து தெரிவிக்க