உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குசலானமலையடிவாரத்தில் வைத்து குடும்பஸ்தரான ஆணொருவர் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலர்சேனை, வேப்பவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சைமன் சில்வா தயானந்த (வயது 55) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வழமைபோன்று மாடுகளைப் பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுப்பகுதிக்குள் இருந்து திடீரென வந்த காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.

சடலம் உடற்கூறாயவுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த காவல்துறையினர் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க