உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் தொடருந்து தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு

போக்குவரத்து அமைச்சர், தொடருந்து பொது முகாமையாளர் மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்துமாறு தொடருந்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை தொடர முடிவு செய்துள்ளன.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட தொடருந்து அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முகாமையாளருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த அதிகாரி அலுவலக நேரங்களில் போதை உட்கொண்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டார் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை ரயில் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வேலைநிறுத்த நடவடிக்கையைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க