உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனையை எதிர்த்து 52 அமைப்புகள் கடிதம்

மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச அமைப்பு மற்றும் 52 அமைப்புகள் இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இலங்கையிலுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ள நிலையில் மேற்படி கடிதம் சர்வதேச மன்னிப்பு சபையினால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் காணப்படும் நிலைப்பாடு இலங்கையினால் மாற்றம் அடையக் கூடும் என அச்சம் அடைகின்றோம்.

இலங்கையில் 40 வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயற்பாடு என்பதையும் வலியுறுத்துகிறோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க