உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனை வழங்க சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி!

மரண தண்டனை வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக ஒரு குழு முன்னிற்பதாகவும் அவர் இதன்போது குற்றம்சாட்டி இருந்தார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க