உள்நாட்டு செய்திகள்புதியவை

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவன நிதி மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் நேற்று செவ்வாய்க்கிழமை தனக்கு கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

உயர் மட்ட அரசியல் தலைவர்கள் கோடிக் கணக்கான நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க