உள்நாட்டு செய்திகள்புதியவை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில வைத்து வழங்கி வைத்தார்.

இதன்படி, மொரட்டுவை தொகுதி அமைப்பாளராக திரு.திலங்க சுமதிபாலவும் இரத்தினபுரி தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி பிரியந்த கருணாதிலகவும் மின்னேரிய தொகுதி மற்றும் ஹிங்குரொக்கொட பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளராக திரு.பீ.ஆர்.உடவத்தவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளராக திரு.ரோஹித கத்தொடுவவும் கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளராக திரு.லால் சிசிர பண்டார கிரிபாகமவும் பிபிலை தொகுதியின் அமைப்பாளராக சட்டத்தரணி ஊதார சொய்சாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க