உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மடுவில் புனித தூயகப்பகுதி அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு

அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் புதிய தூயகப்பகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை மடுவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச வருகை தந்து பணிக்கான நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து அடிக்கல்லினையும் நாட்டி வைத்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மாவட்ட அரச அதிபர் சி.ஏ. மோகன்றாஸ், கலாச்சார அமைச்சின் செயலாளர் பேணாட் ,மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை மற்றும் பல உயர் நிலை பணியார்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க