உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வேலைத்திட்டம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் மற்றும் தேவன் பிட்டி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு மாணி பொறுத்தும் வேளைத்திட்டத்திற்காக இன்று காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மின் இணைப்பு மாணிகள் பொறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின் இணைப்பிற்கான காசோலை வழங்கும் நிகழ்வு குறித்த கிராமங்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை முதல்வர் எம்.முஜாஹிர், மீள் குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜூபுர் ரஹ்மான், உட்பட பலர் கலந்து கொண்டு குறித்த காசோலைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க