விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட்: 4 வது சதத்தை பதிவு செய்த ரோஹித்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் நாணயசுழட்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இணைந்து திறம்பட ஆடி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா கொடுத்த பிடியை பங்களாதேஷ் அணி நழுவவிட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் 4 ஓட்டங்களையும் , 6 ஓட்டங்களையும் விளாசி ரோகித் சர்மா இந்த தொடரில் 4-வது சதத்தினை பதிவு செய்துள்ளார்.
ரோகித் சர்மா 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா – (520 ),டேவிட் வார்னர் – (516 ) ,ஆரோன் ஃபின்ச் – (504) ஷகிப் அல் ஹசன் – (476) ஜோ ரூட் (476) முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கருத்து தெரிவிக்க