உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் குளவி கொட்டி பத்து பேர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராசா வித்தியாலயத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்கள் உட்பட பத்துப் பேர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மாணவர்கள் மற்றும் காவலாளி உட்பட பத்துப் பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையிலிருந்து 300மீற்றர் தொலைவிலுள்ள தனியார் காணியிலிருந்த வேம்பு மரத்திலிருந்து கலைந்த குளவி கூட்டின் குளவிகளே  மாணவர்களை தாக்கின.

இன்று பிற்பகல் சிதம்பரபுரம் வைத்தியசாலையிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் குறித்து கல்வி வலயப்பணிப்பாளருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் இ.தமிழகன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க