உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மணல் மூடைகளை பயன்படுத்தி தூக்கு மேடை டெஸ்ட் செய்யப்பட்டது

தூக்கு மேடையின் செயல்பாட்டை சரிபார்க்க நடவடிக்கைகள் நடந்து வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் எம்.ஜே.ஆர்.டபிள்யூ.  தென்னகோன் நேற்று சிங்கள  சிங்கள ஊடகமொன்றுக்கு செய்தி தெரிவித்துள்ளார்.

மேலும் மணல் மூடைகளை தூக்கிலிட்டு தூக்கு மேடையின் செயல்பாட்டை சரிபார்த்ததாக தெரிவித்துள்ளார்.

தூக்கு மேடையின் செயல்பாட்டை கண்காணிக்க இரண்டு அலுகோசுகளின் உதவி கோரப்பட்டதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் எந்த நேரத்திலும் செயல்படத் தயாராக இருப்பதாகவும் தூக்கிலிடப்பட வேண்டிய நான்கு குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க