உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜூலை ஆரம்பம்!

யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்­சர் அசோக் அபே­சிங்க தெவித்துள்ளார்.

சிவில் விமான சேவை­கள் சட்டங்களின் கீழ் உள்ள கட்டளைகள் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், பலாலி விமான நிலையில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படுவதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விமான நிலைய திருத்தப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் அதி நவீன தொழினுட்ப பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்­சர் இதன்போது கூறினார்.

கருத்து தெரிவிக்க