உள்நாட்டு செய்திகள்புதியவை

2.60 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!

சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் தங்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 55 மற்றும் 45 வயதையுடைய மதிக்கதக்கவர்கள் என பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க