உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குற்றங்களை மூடிமறைக்க மரண தண்டனை தான் திட்டமா?

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளமைக்கு பல்வேறு தரப்புக்களாலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு மரண தண்டனையை அமுல்ப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாதுள்ள போதிலும் ஜனாதிபதி திடீரென இவ்வாறு ஒரு முடிவை அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க