உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது: மங்கள சமரவீர

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என தாம் முன்னரே தெரிவித்து விட்டதாக நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில், தான் ஏற்கனவே தனது தனிப்பட்ட கருத்தை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்றிலும் எதிர்ப்பை வெளியிடும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க