” யார் எதிர்ப்பை வெளியிட்டாலும் மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை இரத்து செய்யமாட்டேன்.” – என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என தெரியவருகின்றது.
” போதைப்பொருள் விற்பனைமூலம் நாட்டையும், இளைஞர்களையும் நாசமாக்கியவர்களையே தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தவறான நடவடிக்கையாக கருதவில்லை.” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மரண தண்டனை அமுலுக்குவரும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க