ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதுவரையில் 10 கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஈ.பி.டி.பி., லிபரல் கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி, உலமாக்கட்சி உட்பட 10 கட்சிகளே இவ்வாறு புதிய கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த மாத இறுதியில் கைச்சாத்திடப்படவுள்ளது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான பேச்சுகளில் பஸில் ராஜபக்ச தலைமையிலான குழு தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.
கருத்து தெரிவிக்க