உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்று முதல் ஏழு நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது

இன்று முதல் ஏழு நாட்களுக்குள் எந்தவொரு கைதியும் தூக்கிலிடப்படமாட்டார் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார்.

மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு எதிரான ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்தபோது அவர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், குறித்த மனு தொடர்பிலான விசாரணையை நீதிமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்தி வைத்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடக் கோரி மலிந்த செனவிரத்ன என்பவரால் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க