உள்நாட்டு செய்திகள்புதியவை

காத்தான்குடியில் 36 வாள்கள் மீட்பு

புதைக்கப்பட்டிருந்த முப்பத்தாறு வாள்கள் இன்று காத்தான்குடியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குற்றப்புலனாய்வு பிரிவு காவலில் உள்ள முகமது மில்ஹான் என்பவர் அளித்த தகவலைத் தொடர்ந்து வாள்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் ஆயுதப் பிரிவின் பொறுப்பாளராக முகமது மில்ஹான் இருக்க கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

பாரிய பிளாஸ்டிக் குழாய்களுக்குள் இருந்து குறித்த வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க